தக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து உலகெங்கிலும் தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து; என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவிப்போம்..
வித்யாசாகர்
வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம்,
ஒரு இனிய பாடல் உங்களின் தமிழ் உணர்வுகளை உணர்ச்சி பொங்க கவிதையை மாற்றியதற்கு நன்றிகள் நான் இதை முதலில் mp3 . யாக கேட்டேன் நன்றாக இருந்தது இந்த பாடலை எனது “கைபேசியில் ” பதிவிறக்கி கொண்டேன் இப்போது காட்சி பாடலாக பார்பதற்கு அருமையாக உள்ளது உங்களின் இந்த ஆக்கம் தெடர எனது வாழ்த்துக்கள்.
“உங்களின் கவிதையை பாடலாக மாற்றி அதை காட்சி பதிவாக கோர்வை செய்து, அதை உலக தொலைகாட்சியில் ஒளிபரப்பி உலக தமிழர்கள் பார்வைக்கு விருந்தாக்கிய GTV தொலைகாட்சியினருக்கும் நன்றிகள் ”
என்றும் அன்புடன்
ச . நூருல் அமீன்
ஷர்ஜாஹ்
LikeLike
அன்பு வணக்கம் நூருல்,
உங்களின் தொடர் அன்பிற்கு நன்றி. நீங்கள் காட்டும் உற்சாகம் மகிழ்வினை அளிக்கிறது. மகிழ்வு மேலும் எழுதுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.
மிக்க நன்றி உறவே..
LikeLike