பதிவர் தொகுப்புகள்: வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-9)

9) காதல் அப்படியொரு இனிப்பு. கசப்பை சகிக்கும் இனிப்பு. நினைவை தொலைக்கமுடியாமல் நினைத்து நினைத்து சாகத் துடிக்கும் இதயத்தை உணர்வுகளால் அடைத்துக்கொள்ளும் இனிப்பு. விஷம் கக்கும், ஞானம் தரும், நாகரிகம் வளர்க்கும், மனிதமூறச் செய்யும், மானுடப் பிறப்பை இன்பக் கடலில் மூழ்கடித்து சாகச் சாக உயிர்களைப் பிறப்பிக்கும் காதல். ஆனால் காதல் ஒரு பொருளில்லை. கடையில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-8)

பசி ஒரு பெருங்கொடுமை. பசியொரு உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். ஜீவராசிகள் வாழ்வதன் காரணத்தை உடல்மையமாக சோதித்துப் பார்த்தால் கடைசியில் வயிற்றிற்காக மட்டுமே வாழ்வதாக ஒரு பதில்கூட கிடைப்பதுண்டு. மரணத்தின் வேர் எதுவென்று காட்ட ஒரு சொட்டுத் தண்ணீராலோ அல்லது ஒரு பிடி உணவாலோகூட முடிந்துவிடுகிறது. பசியின் கொடுமையால் மட்டுமே மிருகங்கள் மிருகத்தைக் கொல்கிறது. மனிதனும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-7)

7) சோர்வென்பது மனதின் வீழ்ச்சிதானன்றி வேறில்லை. உடைந்த சுவற்றில் வரையும் சித்திரம் முழுமையில்லாது போகலாம் ஆனால் அர்த்தமில்லாது போய்விடாது. முயற்சிப்பவருக்கு மூச்சுக்காற்று கூட ஆயுதம் தான். கத்தி இருந்தும் துப்பாக்கி இருந்தும் தோற்ற மனிதர்களின் எண்ணற்ற வரலாற்றுக் காகிதத்தில் சர்க்கரை மடித்து வாங்கிச்சென்றதை நாம் மறுப்பதற்கில்லை. வென்றவனுக்குச் சாட்சி கேட்பவர்கள் கண்ணாடியை உற்று நோக்குவதில்லை. காலங்காலமாகப் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-6)

6) புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே தேடிக்கொள்கின்றனர். தேடித் தேடிக் கொணர்ந்து … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்