Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..

“அம்மா” இறப்பைப் பற்றியே நினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது??? அம்மா இறப்பாள் என்று சொல்வதையே தாங்கமுடியாத உயிர் அம்மாவைவிட்டுப் பிரிந்தும் எப்படியின்னும் போகாமலிருக்கிறதோ(?) அம்மா சுமந்த மடி அவள் தாங்கிய கர்ப்பம் அவள் ஊட்டிய சோறு அம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம் அவளில்லாத நேரத்தில் கொல்லுமென்று அம்மா தெரிந்திருக்கமாட்டாள், அவள் மூடிப் படுத்திருந்த கண்களை நினைக்கும்போதெல்லாம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“மேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும்”

ஒவ்வொரு எரியும் தீக்குச்சியாய் விளக்கேற்றி விட்டு அணைந்துவிடுகின்றனர் உழைப்பாளிகள்; எடுக்கும் பணத்தின் நன்றிகளையும் வட்டிக்கு விட்டுவிட்டு உழைப்பவர்களின் ரத்தத்தில் நீந்தி தலைமுறைகளைக் கடந்துவிடுகிறார்கள் முதலாளித்துவ அட்டைகள்; மூக்கடையும் சாக்கடையில் உயிர்மிதக்கும் கனவுகளுக்கு பொறுப்பில்லா கயமைதனத்தை எண்ணவும் மறுக்கிறது சமுதாயம்; குடித்துமிழும் சாராயத்தின் எச்சில் நோண்டி நாற்றமென்று முகம்பொத்திக் கொள்கிறது மனிதம் தொலைக்கும் மக்கள் கூட்டம்; வியர்வையில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயதானாலென்ன மருந்திருக்குச் சாப்பிடலாம்..

1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ? ஒரு சொட்டுக் கண்ணீரை விடுவாள்… கண்ணீரின் ஈரத்தில் கடக்கிறதென் காலம்.. ——————————————————————- 2 பொதுவாக எல்லோரும் வாழ்த்தும்போது நூறாயுசு என்று வாழ்த்துவார்கள் இந்த மனித ஜென்மங்களோடு நூறு வருடம் வேறு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கழிவுநீரில் களவுபோன மனிதம்..

அந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம் அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது கால்களங்கே தானே நகர்கிறது உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை துளைக்கிறது, குடல் புரண்டுவிடுமளவின் வாடையில் மூக்கை மோவாயய் மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள் பார்ப்பேன்; தலைநனையக் குனிந்து அலுமினியச் சட்டியில் தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும் உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த வயதானவர் இருக்கிறாராயென்று பார்ப்பேன்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்றும் சாகாத பிறப்பின் விடியல்..

கண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்