Category Archives: கவியரங்க தலைமையும் கவிதைகளும்

பெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…

வெறும் சவ்வுகளாலான இதயத்தை அன்பு நிரப்பி – மனசாக்கிக் கொள்வோம்! சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம்!! கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , | மறுமொழியவும்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் பாராட்டு விழா!!

வாழ்வின் மௌனமான வாய்பேசா தருணத்திலும் வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை உணரும்  தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை.. வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும்,  பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 3 மறுமொழிகள்

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , , , | 2 மறுமொழிகள்

கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

அன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 மறுமொழிகள்

“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!

சொல்லும் பொருளும் அரசாலும் எம் சந்தக் கவியும் ஜதிபாடும், உள்ளும் புறமும் அழகாகும் தமிழ் எங்கும் எதிலும் முதலாகும், மொழியும் உயிரும் ஒன்றாகும் அதிலும் தமிழே சிறப்பாகும்.., கம்ப நாத கவிமலரே.. கடல் காற்று வானமென கலந்த தமிழழகே; என் உச்சுமுதல் நிறைந்தவளே நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்! பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , , , , | 11 மறுமொழிகள்