குறிச்சொல் தொகுப்புகள்: ஐக்கூக்கள்

என்றும் சாகாத பிறப்பின் விடியல்..

கண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..

1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தக விமர்சனம் – அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

உறவுகளுக்கு வணக்கம், மேற்குறிய நம் காதல் கவிதைகளின் தொகுப்பிற்குரிய விமர்சனம் கீழுள்ள தனிச் சுட்டியின் வழியேக் கிடைக்கப்பெறும் புத்தகங்கள் விற்பனைக்கு எனும் பக்கத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது. நம் படைப்புக்களை வாங்கிப் படிக்க எண்ணுவோர் சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் மற்றும் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட், புத்தகநிலையம் சென்று வாங்கிக் கொள்ளலாம். இணையம் மூலம் வாங்க எண்ணுவோர் நூலுலகம் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக