குறிச்சொல் தொகுப்புகள்: வித்யாசாகர் படைப்புகள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8)

இதற்கு முன்.. சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர். ‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)

உலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி. பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 6)

இதற்கு முன்.. அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உலகை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன.. ‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே… கடல் துரோகி.. … Continue reading

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு!

அன்புடையீர் வணக்கம், லண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா. நமது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே, லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே, கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே, சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்