எனது பயணம்..

நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல் கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியை போன்றது ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது.

பரபரக்கும் உலக வாழ்க்கைக்கு நடுவே நின்றுகொண்டு, காணுமிடமெல்லாம் குற்றம் குற்றம் என்று கர்ஜிக்கையில்; கத்தியெடுத்து சீவ முடியாத தலைகளை எழுதுகோல் பிடித்து எச்சரிக்கையாவது செய்ய நினைத்து, எழுதித் தீர்க்கிறேன். என் எழுத்தின் வாசம் இதுவரை என் தெருமுனை தண்டனைக்குரியவனை தொடக் கூட பெரும்பாடு படுகிறது.

புதியவன் புதியவநென ஒதுக்கி ஒதுக்கியே வருடங்கள் பல கடந்து, எழுத்தில் புடம் போட்டேனோ இல்லையோ ‘என் அகல கண்திறந்து குற்றம் எங்கு காணினும் எழுதுகோல் எடுத்து குற்றத்தின் கன்னம் தொட்டு அறைய துணிவு பெறச் செய்தது என் எழுத்து.

ஆயிரம் ஜாம்பவான்கள், கோடான கொடி புத்தக வரவுகள்.., கணக்கிலடங்கா தமிழ்த்தாயின் வார்ப்புகளுக்குமிடையே ‘என்னையும் வித்யசாகரென எழுத்துப் போர் கொள்ள துணிவு தந்தது என் எழுத்து.

வாழ்வில் எதையோ நிச்சயம் சாதித்தே தீருவோமென்று நம்பி நம்பியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்த, எனக்குள்ளிருந்த, எழுத்தாளனை.. கவிஞனை.. இந்த உலகத்திற்குக் காட்டிய வெளிச்சம் என் எழுத்து.

டவுள் இவ்விதம் இருக்கிறாரென்றும், குடிப்பழக்கம் எப்பொழும் தவறென்றும், காதல் மட்டுமே வாழ்வின் முடிவில்லையென்றும், நம்பிக்கை கொள் நட்சத்திரமாவாயென்றும், உண்மையாய் இரு ‘உண்மை’ ஒளிவட்டமாய் உனை காக்குமென்றும், ஒழுக்கம் கொள் உலகம் உன்னை வணங்குமென்றெல்லாமும் நண்பர்களுக்கும் தம்பி தங்கைகளுக்கும் கடிதமெழுதிக் கொண்டிருந்த வெங்கடாசலத்திற்கு உலகை உறவாக்கி ‘அசையும் தாவரத்திலிருந்து அசையா மலைகள் வரை; சில்லென்ற காற்றிலிருந்து சீரும் நேருப்பு வரை; அழகான நதியிலிருந்து அகன்ற கடல் வரை; மெல்லிய மனிதரிலிருந்து விரிந்து பரந்த வானம் வரை சொந்தமாக்கி, என் கடிதங்களை எல்லாம் கவிதைகளாகவும் கதைகளாகவும் நாவலாகவும் கட்டுரைகளாகவும் மாற்றித் தந்து வித்யசாகரென பெயர்சூட்டி ‘உலகமகா பொறுப்பு கொடுத்தது என் எழுத்து.

றங்கிக் கொண்டே விழித்திருந்தும், விழிமுழுதும் எழுத்துக்களை சுமந்துக் கொண்டும், உண்ணும்போதும் உறங்கும் போதும், வேலைக்கு மத்தியிலும், குழந்தையின் அழுகையிலும், குளியலறை ஈரத்திலும் ‘காகிதம் நனைய ‘கொதித்தெழும் எண்ணங்களை எழுதுகோலுக்கும் சுடாமல் எழுதித் தீர்பதுமாகவே என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பது என் எழுத்து.

ணினியின் ஜால வித்தைகளுக்கு நடுவே வாழும் மனிதர்களுக்கு நாவல் குறுநாவலாகி, குறுநாவல் சிறுகதையாகி, சிறுகதை நிமிடக் கதையாகி; நிமிடமும், அரை, காலென்றாகி விட்ட காலத்திலும், எழுதுவதை தவமாக நினைத்துக் கொண்டு, தன் தமிழ்தாயிற்கு எழுத்துக் காணிக்கை கொடுக்க வெற்றி எனும் சக்தி கேட்டு, ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண இளைஞனின் எழுத்து, என் எழுத்து.

ண்டசராசரம் வரை நீளும் பார்வையில் வீட்டை உலகமாகவும், உலகை வீடாகவும் பார்த்து பார்த்து..

1, சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய் (சிறுகதை)
2, விற்கப் படும் நிலாக்கள் (குறுநாவல்கள்)
3, வீழ்ந்தது போதும்; வாழ்ந்து காட்டு (கவிதை)
4, திறக்கப் பட்ட கதவு (குறுநாவல், சிறுகதை)
5, கனவுத் தொட்டில் (நாவல்)
6, வாயிருந்தும் ஊமை நான் (சிறுகதை)
7, இதோ என் வீர முழக்கம் (கவிதை)
8, சாமி வணக்கமுங்க (ஆண்மிக விளக்கக் கதைகள்)
9, Dreams Cradle (கனவு தொட்டிலின் ஆங்கில மொழிபெயர்பு நாவல்)
10, பிரிவுக்குப் பின் (கவிதை)
11, எத்தனையோ பொய்கள் (சிறுங்கவிதை)
12, அவளின்றி நான் இறந்தேனேன்று அர்த்தம் கொள் (காதல் கவிதைகள்)
13, விடுதலையின் சப்தம் (ஈழக் கவிதைகள்)
14, கண்ணடிக்கும் கைதட்டும் ; ஆனால் கவிதையல்ல (கவிதை)
15, சில்லறை சப்தங்கள் (சமூகக் கவிதை)
16, உடைந்த கடவுள் (சிறுங்கவிதை)
17, ஓட்டைக் குடிசை (சிறுகதை)
18, வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை (சமூகக் கவிதை)
19, அரைகுடத்தின் நீரலைகள் (சமூகக் கவிதை)
20, ஞானமடா நீயெனக்கு (தொப்புள் கொடி உணர்வுகள்)
21, கொழும்பு வழியே ஒரு பயணம் (ஈழவிடுதலை பற்றிய நாவல்)
22, பறக்க ஒரு சிறகு கொடு (காதல் கவிதைகள் மட்டும்)
23, கண்ணீர் வற்றாத காயங்கள்.. (ஈழவிடுதலைக் கவிதைகள்)
24, நீயே முதலெழுத்து (சமூக கவிதைகள்)
25, அம்மாயெனும் தூரிகையே.. (சமூக கவிதைகள்)
26, உன்மீது மட்டும் பெய்யும் மழை.. (எழுசிக் கவிதைகள்)
27, கல்லும் கடவுள் (வாழ்க்கைக் கவிதைகள்)
28, காற்றாடி விட்ட காலம் (வாழ்க்கைக் கவிதைகள்)
29, பறந்துப் போ வெள்ளைப்புறா (ஊக்கக் கவிதைகள்)
30, வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம் (ஆய்வுக் கட்டுரை)
31, திரைமொழி (திரை விமர்சனம்)
32, மீனும் மீனும் பேசிக்கொண்டன..(உயிர்வதை தடுப்புக் கட்டுரைகள்)
33, தூண்டுகோல் (சிறுவர் மற்றும் சீர்திருத்தப் பாடல்கள்)
34, வாழ்த்துச்சரம் (மகிழ்ச்சிக் கவிதைகள்)
35, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும் (காதல் கவிதைகள்)
36, கொஞ்சம் நில்லுங்கள் (நேர்க்காணல்களின் தொகுப்பு)
37, ஒரு கண்ணாடி இரவில் (சமூக கவிதைகள்)
38, பிஞ்சுப் பூ கண்ணழகே (கவிதை கதம்பம்)
39, காற்றின் ஓசை (சமூக இலக்கிய நாவல்)
40, வாழ்வை செதுக்கும் ஒரு நிமிடம் (வாழ்வியல் கட்டுரைகள்) என என்னை இத்தனை புத்தகம் வரை கொண்டு வந்தது என் எழுத்து.

ந்த என் எழுத்துப் பயணத்தில், எண்ணை முதலாய் அங்கீகரித்து, என் உயிரை மையிலிட்டு எழுதத் துவங்கிய என் எழுத்துக்களுக்கு முதல் விலாசம் கொடுத்து என் முதல் கவிதையை பிரசுரித்தது ‘ராணி வார இதழ்‘.

டையே நடிகர் குட்டிக்கு நானெழுதிய “நம்பிக்கையின் நலவேந்தன்” என்ற வாழ்த்துக் கவிதை குவைத்திய விழா மலரொன்றில் வெளி வந்து, இப்படி ஒருவன் குவைத்தில் எழுத்துக்களை சுமந்து வாழ்கிறேன் என குவைத்திய தமிழர்களுக்கு அறிவித்த நேரம் அது. அதே என் கவிதை தலைப்பையே “குவைத் பாரதிக் கலை மன்றத்தின்’ முன்னாள் செயலாளர் திரு.கவிசேய் சேகர் அவர்கள் ‘நடிகர் குட்டிக்கு பட்டமாக கொடுத்ததாய் தெரிவிக்க, குவைத்தின் தமிழுள்ளங்கள் என் எழுத்துக்கு பலமூட்ட என் கவிதைகள் ஒவ்வொன்றாய் மேடையேற துவங்கின.

தற்கு இடை பட்டக் காலத்தில் என் எழுத்துக்கு மதிப்பளித்து அவைகளை புத்தகமாக்கி என்னை எழுத்தாளனாய் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஐயா திரு.ரவி தமிழ்வாணன்’ அவர்கள், அதேநேரம் என் கவிதைக்கு மேடை தந்து என்னை கவிஞனாக மேடையேற்றியது ஐயா திரு.செம்பொன் மாரி கா.சேது அவர்கள். இதற்கிடையே எழுத எனக்கு பெரும் உதவியாய் இருந்தவர்களில் முதலாய் என் தம்பி வித்யாகரனும் இன்னும் பல தம்பிகளும் சக நண்பர்களும் ஏராளம்.

யினும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் பணம் தேடி அலைகையில், பணமெதற்கு எங்களிடம் தாருங்கள் நாங்கள் இலவசமாகவே அச்சிட்டுத் தருகிறோமென கூறி ‘என் எழுத்துபாலத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்தவர்கள் லியோ பதிப்பகத்தாரான சகோதரி. திருமதி.சந்திரமதி அவர்கள்.

க, மொத்த கைதட்டல்களின் சபதங்களோடும், உதவ தோள் தந்த பலத்தோடும் உலகத்தின் அடையாளங்களில் என் பெயரையும் பதித்துக் கொள்ள புதுரத்தம் பாய்ந்து எழுதியவைகளை எல்லாம் அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்ப ஆரம்பித்தேன், இரண்டாவதாய்..”நான் வீடு பெசுகிறேனென்ற” கவிதையை வெளியிட்டது ‘பாக்யா வார இதழ்‘.

ந்நேரம் தான் நிகழ்ந்தது அது,

ஒரு சின்ன முல்லை கொடிக்கு தன் தங்க வைர வைடூரியத்தாலான தேர் தந்த பாரியை போல, இந்த சிறியவனை பாராட்டி, என் “இதுபோன்ற வரிகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்துள்ளன” என மேதகு ‘மூத்தறிஞர் அப்துல் கலாமையா அவர்கள் இந்திய தேசத்தின் ஜனாதிபதியாக இருந்தபோதே ‘இந்திய சின்னம் பொறித்த கடிதத் தாளில்’ அவரின் கைப்பட கையொப்பமிட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.

நான் இன்றுவரை, திரும்பத் திரும்ப எடுத்துப் பார்த்துக் கொள்ளும் கடிதத்தில் அதுவும் ஒன்று. உண்மையில், குருடாகவே இருந்து இறக்கப் போகும் ஒருவனுக்கு பார்வையும் கொடுத்து ‘கூடவே வாழவும் சொன்னால் அவன் எத்தனை மகிழ்வானோ தெரியவில்லை, ஆண்டாள் தவத்திற்கு ஒரு கண்ணன் கிடைத்தபோது ‘அவள் எப்படி மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருப்பாளோ தெரியவில்லை, என் இத்தனை காலம் இருந்த என் எழுத்து தவத்திற்கு ‘ஒரு பெரிய அங்கீகாரமே கிடைத்ததென நான் வானத்திற்கும் பூமிக்குமாய் மனதிற்குள்ளேயே குதித்து மகிழ்ந்தநாள் அக்கடிதம் கிடைத்த அந்த நாள்.

இது என் எழுத்திற்கு கிடைத்த வெற்றியல்ல, அந்த மாமனிதர் ஐயா திரு.அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று என ஊரெல்லாம் சொன்னேன். பார்த்தவரெல்லாம் புகழ, குவைத் செய்தி தாள் கூட அதை மெச்சுதலோடு தன் செய்தியில் வெளியிட, என் நிறுவனமெல்லாம் பாராட்ட, இத்தனை தகுதி நம் எழுத்திற்கு இருக்குமா என சிந்தித்து சிந்தித்து, இனி விடவேண்டாம், எழுத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளென பிடித்துக் கொண்டு, அதை கொண்டு சேர்க்க மீண்டும் வார பத்திரிகை ஒன்றே என் இலக்கென தேடி ஓடி அலைந்தேன். நாட்களை மாதங்களை  விழுங்கி விழுங்கி ‘ஒவ்வொன்றாய் ‘ஒவ்வொன்றிலாய் வெளிவர ஆரம்பித்தது.

இப்படி ஒரு சமயந்தானே வேண்டும் எழுத, எழுதிக் குவிப்போம், உலகின் இயலாமையை தன் எழுத்தால் தீர்ப்போமென எழுதுவதும் தபால்தலை தேடி அலைந்து வார இதழ்களுக்கு அனுப்புவதுமாக இருந்த நேரம் ராணி வார இதழில் தொடர்ந்து சிறு சிறு கவிதைகளாக வர ஆரம்பித்தது. பாக்யாவும் தொடர்ந்து என் சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. அந்நேரம் பார்த்து “தேவி வார இதழிலும் வெளியானது ஒரு கவிதை.

டிந்து வீழும் மரம் கூட விறகாக வீழ, வாழ்ந்து வீழும் மனிதனேன் வெறும் மன்னாவதா? முடியாது. முடியாதெனில் மறுப்பை எப்படி மனிதனுக்கு தெரிவிப்பது? எழுதிக் கொண்டே இரு ‘எழுத்தின் வாசத்தில் ஒரு நாள் அதற்கான அடையாளத்தை மனிதர்களே கண்டு கொள்வார்களென ‘என் இரவையும் பகலையும் எழுத்தாக்கினேன். அதில் ஒரு கவிதை “தினமலரின் வார மலரிலும் வெளிவந்தது.

விடுவேனா, வெறும் எழுதுகோலில் என்னுயிரை மையாய் விடுவேனா, உயிரையும் மையையும் ஒன்றென கலந்து எழுத்துக்களில் குவித்தேன். எழுதிய புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கடைகடையாய் அலைந்தேன். பணம் போட்டு அச்சடித்த பணத்தில் வந்த பணமத்தனையையும் பணமற்று தவிக்கும் “இல்லார்க்கு கொடுத்தேன்.

ன்ன செய்ய.. வேறென்ன செய்ய.. போதாது, இவர்கள் போதமாட்டார்கள், நான் எழுதும் தூரம் வரை ‘எனக்கென்று மட்டுமாய்’ எந்த வார இதழ்களும் துணை வரத் தயாரில்லை. பன்னிரண்டு புத்தகமெழுதி, படியுங்கள் படியுங்கள் என கெஞ்சி அலைந்துவிட்டு, என்னை மக்களிடத்தில் அடையாள படுத்திக் கொண்டால் மட்டுமே ‘என் எழுத்து உலக தமிழரங்கில் மேடையேருமென புரிந்த நேரம், வெறும் ஐந்தாறு கதைகளும் , எட்டொன்பது கவிதைகளும் மட்டுமே வெளிவந்திருக்க மீதமுள்ள என் உழைப்பு சுமந்த படைப்புகளை என்ன செய்ய? கேள்விகள் இதுவரை முழு பதிலாகவில்லை… (புத்தகங்கள் மட்டும் பதினேழினை கடந்துவிட்டது).

தேடல்களுக்கு பின்னேயே வாழ்க்கை நகர்த்தும் எறும்பிற்கு தான் ‘இன்னொரு எறும்பைத் தெரியும். நானும் அப்படியே என் வாழ்க்கையை தேடலாக நகர்த்தினாலும் என் தேடலை புரிந்துக் கொள்வோரின்றி தவிக்கையில், தவிப்புகள் கூட எழுத்துகளானது.

அப்போது எனக்கெனவே துவங்கினாற் போல் குவைத்தின் சுடும் பாலை நிலத்தில் “தமிழ் டாட் கம்” மற்றும் “குவைத் நீதியின் குரல்” என இரு மாத இதழ்கள் ஒன்றன்பின் ஒன்றாய் துவங்கப் பட்டது. இருவரும் நம் கவிதைகளை வெளியிட்டாலும் நீதியின் குரலின் ஆசிரியர் திரு.விழுப்புரம் ஷாஜி அவர்கள் தோழமையோடு கைகோர்த்தார். என் ‘பிரிவுக்குப் பின்‘னென்னும் தொடர் கவிதையை பத்து மாதங்களுக்கு தொடர்ந்து பிரசுரித்துவந்து ‘குவைத் தமிழர்களின் பிரிவின் வலியை தெரிவிக்க நானும் ஒருவன் இருப்பதாய் அவர்கள் முன் பறைசாற்றியது.

அதோடு மட்டுமல்லாமல் நம் ‘கனவுத் தொட்டில்’ நாவல் விமர்சன விழாவில் “வெண்மனச் செம்மல் வித்யாசாகரென” ஒரு விருதையும் தந்து கவுரவித்தது குவைத் நீதியின் குரல்.

ன் முதல் படைப்பான “சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்” போல கனவுத் தொட்டிலும் தமிழக நூலகத்திற்கென தேர்ந்தெடுக்கப் பட்டது. அப்போதைய முதல்வர் கலைஞர் ஐயா கருணாநிதி அவர்கள் அவருடைய பவளவிழாவை முன்னிட்டு அனைத்து பதிப்பகத்திளிருந்தும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட எண்பத்தைந்து புத்தகத்தில் ‘கனவுத் தொட்டில்’ நாவலையும் வெளியிட்டு.. அத்தனை செய்தித் தாள்களிலும் மற்ற படைப்புகளோடு நம் கனவுத் தொட்டிலும் வண்ணமிகு ஜொலித்தது. (அந்த கனவுத் தொட்டில் நாவல் தான் தற்போது ஆங்கிலத்திலும் மணிமேகலை பிரசுரத்தால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது).

தற்காக போதுமென ஓய்ந்து போவேனா???? இல்லை இல்லை.. என் இலக்கு இதோடு நிற்பதற்கானதில்லையே. கொதிக்கும் ரத்தம் முழுதும் சமூகத்தில் காணும் அத்தனை ஒழுங்கீனங்களும் நெருப்பு ஈட்டிகளாய் வந்து புத்தியை சுட, நாட்கள் அப்படியே நீண்டு கொண்டிருந்த ஒரு தினத்தில், எதையோ எழுதினேன் என்று நினைத்திருந்த தினத்தில், எதற்காக எழுதுகிறோமோ என்றும் வருந்திய ஒரு தினத்தில், எப்படி இவைகளை எல்லாம் என் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என படாத பாடு பட்ட ஒரு தினத்தில், முதுமைக்கும் பெருமைக்கும் உரிய “கலைமகள் இலக்கிய மாத இதழ் கடந்த மே 2009 – ல் நடத்திய அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் நம் கதையான ‘பாவ மன்னிப்பிற்கு’ முதல் பரிசு தந்து கவுரவித்தது.

மதம் பற்றி பேசுகிறோமே, கடவுள் பற்றி எழுதுகிறோமே, உலகம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ, எப்படி எல்லோருக்கும் புரியும் வண்ணம் பாவ மன்னிப்பு குறு நாவலை கொண்டு சேர்பதோ என தவித்த ஒரு படைப்பு, ‘சில எதிர்ப்புகளையும் தாண்டி முதல் பரிசுக்கு தேர்வு பெற்றதற்கான நன்றியறிதல் ஆசிரியர் திரு.கீழாம்பூர் அவர்களுக்கும், தேர்வுக் குழுவிற்குமே உரித்தாகும். (அந்த குறுநாவலும், அப்துல் கலாமையா பாராட்டிய ஒரு ஆன்மீக குறுநாவலும், மதப் பிரச்சனை குறித்து பேசும் ஒரு சிறுகதையும் சேர்த்துதான் தற்போது ‘சாமி வணக்கமுங்க’ என ஆன்மீக தொகுப்பாக வெளிவந்துள்ளது).

தற்கு இடை பட்ட நாட்களில், மலேசிய நன்பனில் கவிதை, ஆங்காங்கே வெளிவரும் சிற்றிதழ்களில் கவிதை, வீட்டிற்கு வரும் கடிதங்களென என் இந்த பத்து வருடத்திற்குமான பலன்கள் ஒவ்வொன்றாய் வந்துக் கொண்டிருக்கையில், ஈகரை தமிழ் களஞ்சியமென்ற ஒரு அரிய சொல்லவொணா சிறப்பு மிக்க தமிழ்வலைப் பகுதி ஒன்றினை தம்பி தமிழன் மணியன் மூலம் அறிந்து, அதில் உறுப்பினராக சேர்ந்து, எனக்கென ஈகரை வலை பகுதியில் “வித்யாசாகரின் பக்கங்களென” ஒரு பக்கமும் ஒதுக்கப் பட்டு, என்னை மிகையாய் ஊக்குவித்து.. விமர்சித்து.. பாராட்டி.. அன்றைய தினத்தில் எனை உலகளவில் அறியவைத்த பெருமை ஈகரை குடும்பத்திற்கே சாரும்.

ருப்பினும், எங்கு வாழ்கிறோம் நாம்? சுட்ட புண் பல ஆறாத சமூகத்திற்கு மத்தியிலல்லவா நம் வாழ்க்கை நடக்கிறது. பரிசுகள் மகுடமாகலாம் முடிவாகுமா? எழுதத் துடித்த கைகளும், உலகை எண்ணி எண்ணி வாழும் புத்தியும் அடங்கிப் போகுமா? எழுதித் தீர்க்க குருதியில் வீரம் சேர்த்துக் கொண்டது வெறும் பரிசிற்கும் விருதிற்குமா? இல்லையே. வேறென்ன செய்ய –

ஒரு பெரிய லட்சியத்தை வெல்ல சிறிய பல லட்சியம் கொள் என்பார்கள், அப்படி என் படைப்புகளை படிப்போர் மத்தியில் கொண்டு சேர்க்க அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்த நான், லட்சியம் ஒன்றாக இருப்பின் வெல்லும் என உறுதி கொண்டு ஆனந்த விகடனுக்கு மட்டுமே கவிதைகள் கதைகளை அனுப்புவது என முடிவு கொண்டேன்.

அடங்காத உணர்வுகள், அடக்கமுடியாத உணர்வுகள் அத்தனையையும் படைப்பாக்கி, ஆனந்த விகடனுக்கு மட்டுமென அனுப்பினேன். இரவும் பகலும் எழுதியதையும் எழுதுவதையும் கணினியில் தமிழாக மாற்றி மின்னஞ்சலில் விகடனிடம் பதிவு செய்தேன். அங்ஙனம் செய்ததில் இந்த விகடப் பிரியனின் கவிதை ‘கடந்த 07.10.2009 ‘ அன்று  “அம்மாவிற்கு தெரியாத ரகசியமென்ற” தலைப்பில் ஆனந்தவிகடனிலும் முதன் முறையாய் வெளியானது.

ன் வாழ்வின் அத்தனை வெற்றிகளையும் தூர எறிந்து விட்டு.. முன்னே முந்தி கொன்டு வந்துவிட்டது ஆனந்தவிகடனில் வெளிவந்த என் கவிதை. அதை பார்த்தபோது தரை தொட்ட என் ஒரு சொட்டு கண்ணீரில், ‘இந்த பூமியையே நனைக்கத் துணிந்த அந்தமுதல் வெற்றி என் எழுத்துப் பயணத்தை சற்று கூடுதல் வேகமாக நீட்டிக் கொண்டிருக்க ‘எத்தனையோ வருடம் எழுதுகோல் தாங்கி இதயங்களை உழுதுபார்க்க, கொட்ட கொட்ட தூக்கம் தொலைத்து விழித்திருந்த.. புத்தகங்களை காகிதங்களாய் நிரப்பி ‘உலகின் தூரம் வரை கொண்டு செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்த ‘ஒரு சாமனியனை தன் ஒரு சின்ன அரவணைப்பினால் உலகத்தின் முன்னே ‘என்னையும் ஒரு கவிஞனென பறைசாற்றிய விகடனுக்கு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நன்றிகளே கண்ணீரின் ஈரமாக எழுத்துகளில் கரைந்தது.

ன்று இணையத்தின் ஒவ்வொரு மூலையிலும் என் பெருத்த நன்றிகளுக்குரியவர்களாய் ‘நண்பன் இணையம், முத்துக்கமலம், தமிழ் ஆதர்ஸ், யாழ்தேவி, மீனகம், தமிழ்த்தோட்டம், வார்ப்பு, செய்தி.காம், தமிழ்மணம், திரட்டி, தமிழரின் சிந்தனை களம், ஈழநேசன், லங்காஸ்ரீ, தினக்குரல், தமிழ்வின், சூத்திரம், தமிழ்மீடியா, உலக தமிழ் இணையம் என நீண்டு கொண்டிருக்க, ‘என்னை முழுதுமாய் ஆக்கிரமித்து புதிய வலைதளம் திறக்க உதவியது வேர்ட்ப்ரெஸ் வலைமையம்.

அதன் உதவியினால்  ‘வித்யாசாகரின் எழுத்துப் பயணம்‘ எனும் வலைதளத்தை துவங்கி, ‘நான் எழுதாத நாள் என் வாழாத நாளென’ எண்ணி இயங்கிக் கொண்டிருக்க, முகநூல் உறவுகளால் மேலும் பலம் பெற்று ‘அம்மா ‘மனைவி ‘குழந்தை ‘உறவுகள் போல, எழுத்தும் என் ஒரு அங்கமாக நகர்கிறது வாழ்க்கை.

ந்த நகர்தலின் இடைவெளியில் தான் வாழ்வின் இன்னொரு அங்கிகாரம் கிடைத்தது. அது ‘தமிழகஅரசு இணைய பல்கலைக் கழக’ பாடத்தில் என்னைப்பற்றியும் பொதுவாக தற்போதைய படைப்புக்களின் மாறுதல் மற்றுமதன் சாரம் குறித்தும் சேர்த்திருக்கும் செய்தி. வாழ்வில் பட்ட அத்தனை துயரத்திற்கும், உழைத்த மொத்த உழைப்பிற்கும் உரிய பலன் கண்டிப்பாக உண்டென உணர்த்தி, உடலெல்லாம் எழுத்தின் பூரிப்பாய் பூத்த கணம் அது.

எங்கோ இருந்து கொண்டு, எப்படியோ என் படைப்புகளை வாசித்து, என்னையும் உலகின் பார்வைக்கு பதிய நினைத்த அந்த பாடத்தின் ஆசிரியர், ஆசிரியர் குழு, முகம் காணாத, யாரென்றே தெரியாத அந்த அன்பு இதயங்களுக்கு, அந்த இணைய பல்கலைகழகத்திற்கு ‘நன்றிகளாய் நினைவில் கரைந்த நாள் அது.

ப்படியோ, உலகின் ஒரு ஓரத்திலிருந்து துவங்கிய என் எழுத்துப் பயணம் ‘இந்த பதினான்கு வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட புத்தகங்களாக பதிக்கப் பட்டு வந்தாலும், அதையும் ‘இப்படி பதித்துக் காட்டுகிறேன் பாருங்களென’ ஒரு தனிச் சிறப்பினை நம் படைப்புகளுக்குள் புகுத்தி, ஏன் நாமே ஒரு பதிப்பகம் துவங்கி இதுவரை வெளிவராத படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடக் கூடாதென எண்ணிய மாத்திரத்தில், தானாக முன்வந்து ஆலோசனை தந்தது மட்டுமின்றி ‘முகில் பதிப்பகத்தின்‘ முதல் புத்தத்தையும் நூலகழகு செய்து அச்சிட்டுக் கொடுத்தவர் தோழர் ‘தமிழலை ஊடக உலகின்’ நிறுவனர் கவிஞர் இசாக் அவர்கள்.

இப்படி எல்லோரின் நன்றிகளையும் மனதில் சுமந்து எழுத்தாய் நகர்ந்துக் கொண்டிருக்கையில் தான் மின்னஞ்சல் வழியே வந்தது அந்த விருது பற்றியச் செய்தி. உலகக் கவிஞர்கள் பேரவையும், தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்பும், எம். ஐ. ஈ. டி. கல்வி நிறுவனமும் சேர்ந்து நடத்திய “உலக எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் மாநாட்டில்” நமக்கான ஐந்து விருதினை ஒருசேர அறிவித்திருந்தது. “இலக்கியச் செம்மல்” என்ற சிறுகதைகளுக்கான மூன்று விருதும், “தமிழ்மாமணி” என்ற கட்டுரைக்கான ஒரு விருதும், “கவிமாமணி” என்ற கவிதைக்கான ஒரு விருதும் என ஐந்து விருதுகளை வழங்க, அம்மா தன் கைகளால் பெற்றுக் கொள்ள, உடனிருந்து தம்பி தமிழினியனும் முகநூல் சகோதர அமைப்பினைச் சார்ந்தோரும் பெருமை சேர்க்க, என் நம்பிக்கைக்கு வானளவு பலம் சேர்க்க இணையம் முழுதும் வாழ்த்தாகக் குவிந்த நாள் அந்த திருநாள்.

அதையடுத்து முகத்தில் மின்னிய மின்னலாய் ஒரு சிரிப்பினைப் பூக்க வைத்தது நம் குங்குமம் வார இதழ். முதன் முதலில் பாக்யா வார இதழ் தனது நடுப் பக்கத்தில் நம் “வீடு பேசுகிறேன்” கவிதையை வெளியிட்டதுபோல், குங்குமமும் இம்முறை தனது இரு பக்கங்களை நமக்கென ஒதுக்கி “வீட்டின் வாழும் அடையாளம் தலையணை” என்ற கவிதையை ஒரு பக்கமும் அரசின் ஓவியம் ஒரு பக்கமும் பதிந்து நம் எழுத்திற்கு யானை பலத்தை சேர்த்தது. அதைத் தொடர்ந்தும் பல கவிதைகளை வெளியிட்டு நம் எழுத்தை வாசகரிடத்தில் சேர்க்கும் பெரும் பாலமாக விளங்கி வருகிறது குங்குமம் வார இதழ்.

பொதுவாக எழுதுவதென்பது இயல்பாக நிகழ்ந்துவிடுகிற இன்றையப் பொழுதில் அதைக் கொண்டு சேர்க்கவே நன்றிக்குரிய கரங்களைத் தேடுகிறது மனசு. அவ்விதம் குங்குமத்தின் பெருத்த நன்றிக்கும் கைகூப்பலுக்கும் அடுத்து ஆஸ்திரேலியா மின்னிதழான தமிழ் முரசு, அக்கினி குஞ்சு போன்றவையும், காற்றுவெளி, வல்லமை போன்ற மின்னிதழ்களும், தமிழ்த்தென்றல், சந்தவசந்தம், தமிழ்சிறகுகள், தமிழமுதம், பிரவாகம், மின்தமிழ் மின்தமிழ், பகலவன், தமிழுலகம், பண்புடன் போன்ற கூகுள் குழுமங்களும் மகாகவி, வெற்றிநடை, மெல்லினம், நந்தவனம், பயணம் போன்ற சிற்றிதழ்களும், தினக்குரல், மலேசிய நண்பன், மக்களோசை, தினமலர், தினகரன் போன்ற தின வார பத்திரிகைகளும் மற்றும் சில ஈழப் பத்திரிகைகளும் நம் படைப்புக்களைப் பிரசுரித்து பெருமை சேர்த்து வருகின்றன. எல்லோருக்கும் தனித் தனியே கூறிட இயலாத நன்றிக்கு பதிலாக, எழுத்தோடு என்னைக் கரைத்துக் கொண்ட மனதை’ காலம் பதிந்து வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் நிறைந்துப் போகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம் படைப்புக்கள் இன்று உலகெங்கும் பரவி பெற்றுவரும் சிறப்பிற்கு அணிகலனாய் அமைந்து, நம் எழுத்தினை வெளிவரும் முன்னே சுடச் சுட அங்கீகரித்த, இதுவரை நம் படைப்புக்களுக்கு அணிந்துரையும் வாழ்த்தும் தந்து நமைப் பெருமைபடுத்திய ஐயா செம்பொன் மாரி கா. சேது, மேதகு ஐயா அப்துல் கலாம், மதிப்பிற்குரிய ஐயா வை.கோ, பேரன்பிற்குரிய ஐயா அறிவுமதி, பண்பு நிறை ஐயா பிறைசூடன், குடும்ப தோழமை நிறைந்த நன்றிக்கு நிறைந்த ஐயா ரவி தமிழ்வாணன், காலஞ்சென்ற ஐயா லியோ மதி, மதிப்பிற்குய எழுச்சிக் கவிஞர் ஐயா கங்கை மணிமாறன், பெரும் நட்பிற்கும் அன்பிற்குமுரிய கவிஞர் பா.விஜய்,  ஈர்ப்பு நிறைக் கவிஞர் தீபச் செல்வன், ஈடிலா நட்பிற்குரிய படைப்பாளிகளான கவிஞர் முனு.சிவசங்கரன், கவிஞர் விருதைப் பாரி, கவிஞர் எடப்பாளையம் ஏழுமலை, கவிதாயினி மு.சரளாதேவி, கவிதாயினி மஞ்சுபாஷினி, கவிதாயினி லதாராணி பூங்காவனம், கவிதாயினி நிலா லண்டன், கவிதாயினி ராணி மோகன், அன்புநிறை தோழர் மீனகம் காந்தரூபன், நட்பு மிகு கவிஞர் மற்றும் பன்முகப் படைப்பாளர் திரு மணி, காற்றுவெளி இலக்கிய இதழின் பெருமைக்குரிய ஆசிரியர் முல்லை அமுதன், படைப்பு நட்சத்திரங்களின் வானமாக விளங்கும் தமிழ் ஆதர்சின் நிறுவனர் எழுத்தாளர் அகில், என் வியர்வையை நறுமனமாக்கும் அன்புச் சகோதரர்களாகிய கவிஞர் இசாக், கவிஞர் தா. அகிலன், பன்முகப் படைப்பாளர் திரு. பாரதித் தம்பி மற்றும் இணையம மூலம் நம் ஒவ்வொரு படைப்புக்களுக்கும் அரிய பல கருத்துக்களை வழங்கி நம்மை ஊக்குவிக்கும் செம்மைபடுத்தும் பெயர்கூறித் தீரா இதயங்களான படைப்பாளிகள் அனைவருக்கும், முகநூல் தோழமை உறவுகளுக்கும், உயிரின் விளிம்புவரை நிறைந்த நன்றியில் என் மிச்ச நாட்களையும் நிறைக்கிறேன்.

பின்பும் கரைமுட்டும் அலைபோல அடுத்தடுத்து என் நன்றிக்குரியோர் என் பின்னே எனைத் தொடர்ந்தே நிற்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக GTV எனும் பெயர்கொண்ட ஐரோப்பிய ஆஸ்திரேலிய கண்டங்களிளிலும் மத்திய ஆசிய நாடுகளிலும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்று பெரும் பங்கினை வகிக்கிறது.

முதன் முதலாய் என் எழுத்துக்களுக்கு இசையையும் சேர்த்து பாடலாக்கிய பெருமையும் வாழ்நாள் நன்றியும் சமூக அக்கறைக் கொண்ட இசையமைப்பாளரான “திரையிசைத் தென்றல்ஆதியையேச் சாரும். அங்ஙனம் அவர் இசையமைத்து பாடிய நம் “ஒன்று கூடு.. ஒன்று கூடு..” பாடலையும் அதன் பின்னான நம் பல படைப்புக்களையும் தனது நிகழ்ச்சிக்களில் பகிர்ந்து ஈழ விடுதலையின் நீதிக்கு வலு சேர்க்க நாமெடுத்த முயற்சிக்கு பெரிதும் உதவியாய் இருந்தது இந்த GTV  தொலைக்காட்சி நிறுவனமும் அதன் தொடர்பாக அவ்வப்பொழுது நம்மைத் தொடர்புகொண்டு, ஊக்கமளித்து, மனதளவில் உடனிருந்த அன்புச் சகோதரி ரேணுகா அவர்களுக்கும் என் பெருத்த நன்றி உரித்தாகும்.

இப்படி அ வென எழுத்தில் ஆரம்பித்து இ ஈ உ ஊ ஹா ஹாவென ராகமாக மாறி விரைவில் திரு. ஆதி, திரு. அய்யப்பன், திருமதி. செல்வி அய்யப்பன், திரு. கந்தப்பு ஜெயந்தன் என இசைக்கு தனை அர்பணித்துக் கொண்டவர்களோடு சேர்ந்து “ஒன்றுகூடு” மற்றும் “மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்” என இரு குறுந்தகடு வெளியிடவும், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஆங்கிலப் பாடலை தமிழ்படுத்த உதவியமைக்கும், ஒற்றுமைப் பாடல், மரணதண்டனைப் பாடல், காதல் பாடல், சோகப் பாடல், சிறுவர் சீர்திருத்தப் பாடலென முகில் பதிப்பகத்தை முகில் படைப்பகமாய் ஆக்க துணைநின்றமைக்கும் உரிய நன்றிகள் அனைத்தும், எனைத் தொடர்ந்து படித்து பின்தொடரும் வாசக உள்ளங்களாகிய உங்களையேச் சாரும்.

இறுதிவரை இப்படி ‘வணக்கம் சொல்லக் கூட பொறுமையின்றி ஆரம்பித்த இந்தக் கட்டுரையை முடிக்கும் முன் ‘என் எழுத்துப் பயணத்திற்கு இன்னொரு துணையாகி, என்னை என் முடிவுவரை பின்தொடரயிருக்கும், தொடர்ந்து எனைப் படித்துவரும் ‘என் அன்புள்ளங்களாகிய தமிழ் மக்களுக்கும், என்னை இத்தனை தூரம் சுமந்து வந்து தாயென வளர்த்த அனைத்து தின, வார, மாத இதழ்களுக்கும், இணையங்களுக்குமெ என் எப்பொழுதிற்குமான சிறந்தாழ்ந்த வணக்கமும் முழு நன்றியும் உரித்தாகும்.

க, முடிவாய், விடைபெறும் தருவாயில் நின்றிருப்பினும், எந்த நிலைக்கும், தன்னை முழுதாக இழந்திடாத போது இறைவனுக்குள் இருப்பதாகவே உணர்ந்து, எவர் இழப்பையும் வருத்தத்தையும் தனதாய் உணரும் போது எல்லாம் நானாய் ஆகி, எல்லாம் நானென்றுக் கொண்டதில் எல்லோருக்குமாய் உடைந்து, எல்லாருக்குமாய் உடைந்த பாதி பாதிக்கு இடையேயுள்ள இடைவெளியில் என்னையும் எழுத்தாகக் கரைத்ததில் தான் முளைக்கிறது என் எழுத்து.

னி, உடைதலுக்கு விளக்கம் தேடியும்; உடையாதலுக்கு வழி தேடியும்; எழுத்தின் எல்லையை எட்டித் தொடும் முயற்சியிலுமே..

எழுத்தின் பயணமாக….

வித்யாசாகர்
(1998 ~ 10.12.2011)

54 Responses to எனது பயணம்..

  1. sarala சொல்கிறார்:

    ஒவ்வொரு வரியிலும் உங்கள் அனுபத்தை பிரதிபலிக்க செய்திருக்கிறீர்கள். தாகம் தீராத அந்த எழுத்திற்கான தேடலே; உங்களை அனைவராலும் தேட வைத்திருகிறது.

    கட்டுரையை படிக்கும்போது தன்னம்ப்பிகை எனக்குள் தானாக எழுகிறது. உங்களை போன்று உள்ள கடைகோடி எழுத்தாளனையும் எழுத தூண்டிவிட்டு, இன்று நீங்கள் இவ்வளவு பிரகாசமாய் இருக்க செய்த அந்த கரங்களுக்கும் என் மகிழ்ச்சியை வெளிபடுதுகிறேன்.

    கடமையை செய்தாலே பலன் வந்தடையும் என்பது எவ்வளவு உண்மை என்று புரிந்துகொண்டேன். இத்தனை தூரம் கடந்து வந்தும் கர்வமில்லாத கனமில்லாத உங்களின் வார்த்தைகளை பார்த்து; மனது பூரித்து தான் போனது. உங்கள் கலைப்பணி சிறக்க தமிழ் தாய் உடனிருப்பாள்.

    எங்கள் வாழ்த்துக்கள் எபோதுமே இருக்கும்…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      கடவுள் மீது பாசம் இருப்பின் மனிதன் மீது பாசம் தானாக சுரக்கும், அல்லது, மனிதன் மீது அன்பு கொண்டால்; அது கடவுளின் மீதும் கொள்ளப் படும். நீங்கள் இரண்டின் மீதும் அன்பு கொண்ட மனமே என்னை இத்தனை ஆழமாக படிக்க வைக்கிறது போல்.

      இதை எழுதியதன் நோக்கம் ‘என் சுயசரிதையை பிறருக்கு திணிக்கும் எண்ணமல்ல, நான் வந்த பாதையை என்னோடு வருபவர்க்கும் சொல்ல வேண்டும், எனக்காக ஒரு சின்ன உழைப்பை தந்தவர்களை இயன்றளவு நினைவு கொள்ளல் வேண்டுமென்று எண்ணிய இடம்; பதிவிது.

      இதை எழுதி வருடங்கள் கடந்து விட்டன. அவ்வப்பொழுது புதுப்பிக்க மட்டுமே படுகின்றன. எனினும், நம் வலையில் பதிந்தும் ஒரு வருடம் தாண்டியே உங்களை மட்டும் எட்டித் தொட்டுள்ளது போல். மிக்க நன்றி சரளா, உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும், ஆத்மார்த்தமான வாழ்த்திற்கும்.

      அதோடு, எனை பார்க்கும் போது; நான் பார்க்கும் உங்களின் கண்களில் தெரியும் அந்த உங்களின் வெற்றியும் இயன்றவரை உங்களால் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது என்பதையும் நினைவில் கூறுகிறேன்.

      நிறைய எழுதுங்கள். நிறைய மெச்சப் படுவீர்கள்!! இறைவன் துணை இருக்கட்டும். வாழ்த்துக்கள் சரளா!!

      Like

  2. Nada Sivarajah சொல்கிறார்:

    எழுத்து பயணத்தில் ஒவ்வொரு படியையும் கடின உழைப்பின் மூலமும் திடமான மன உறுதியோடும் பயணித்துள்ளீர்கள்.
    உங்கள் பயணம் தொடரவும் பணி சிறக்கவும் எனது வாழ்த்துக்கள் .

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தோழர், உழைப்பும் எதையேனும் சாதிப்போம் என்ற எண்ணமும் மேலும் மேலும் செயல்படும் முன்செல்லும் மேல்ஏறும் முயற்சியும் ஓர்நாள் நம்மை உச்சிக்கு கொண்டு செல்கிறது. தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் என் அன்பும் வாழ்த்துக்களுமே உங்களுக்குமாய் உரித்தாகட்டும்!

      Like

  3. நண்டு@நொரண்டு சொல்கிறார்:

    தங்களின் எழுத்துப்பயணம்
    மேலும் மேலும் இதே மேன்மையுடன் தொடர
    வாழ்த்துக்கள் .

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்புள்ள ராஜராஜனுக்கு, நன்றிகள் தோழர். சொட்டும் ஒவ்வொரு சொட்டு வியர்வையும், கண்ணீரும் ‘வாழ்வின் பின் நாளில் இரட்டிப்பாய் கிடைக்க இருக்கும் சந்தோசத்திற்கு ‘நாம் முன்பாக செலுத்தும் முன்தொகை போலன்றி வேறில்லை, என்பதை தோல்வியுறாத உழைப்பும், தோல்வியுறாத முயற்சிகளும், ஆற்றிய கடமைக்குப் பரிசென ‘பாடம் கற்பிக்காமலில்லை!

      Like

  4. மன்னார் அமுதன் சொல்கிறார்:

    17 நூல்களை நீங்கள் எழுதியுளீர்கள் என்பது மிகவும் பெருமைப் படக் கூடிய விடயம் ஐயா… கட்டுரையின் ஆரம்ப வரிகளே //நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல் கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியை போன்றது ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது.// கட்டுரையை முழுதாகப் படிக்கத் தூண்டுகிறது..

    அருமை…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் சகோதரனுக்கு நன்றிகள் பல. எழுத குழந்தையாய் எழுந்து நின்றவனின் கைக்கு ‘உரமானதே உங்களை போன்ற அன்பு தம்பிகளின், தோழமைகளின், வாழ்த்துக்களும்… அன்பும் தான் அமுதன்.

      உங்களுக்குமென் மனதார்ந்த அன்பும் வாழ்த்துக்களும்…

      Like

  5. Rami Thurairaj சொல்கிறார்:

    உங்கள் எழுத்துப் பயணம் மேலும் மேலும் சிறப்புற செல்ல எனது வாழ்த்துக்கள்…

    Like

  6. தனபாலசிங்கம் சின்னத்தம்பி சொல்கிறார்:

    உங்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.. படித்த ஒருசிலவற்றிலேயே ‘உங்களின் ஆளுமைகண்டு வியந்து நிற்கிறேன். நேரமின்மை என்னை துரத்தினாலும் நிச்சயமாக உங்களை புரட்டி பார்ப்பேன். விரைவில்.

    Like

  7. Vetha Langa சொல்கிறார்:

    இனிய நல்வாழ்த்துக்கள் பல.., என்றும்.

    Like

  8. பிங்குபாக்: நானும் என் எழுத்தும் – வித்யாசாகர் (10.08.2010) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

  9. வித்யாசாகர் சொல்கிறார்:

    இப்படிதான்… இப்படி உங்களை போன்றோரால் தான் கைதாங்கி கொண்டு வரப் பட்டேன் உறவுகளே. ஐயா அவர்கள் மன்னிப்பென்றெல்லாம் கோர வேண்டாம். நேரம் கிடைக்கையில் எழுதுங்கள், காத்திருக்கிறேன். வருடங்களாய் காத்திருந்த தாகம் தானே..

    என்னை பொருத்தமட்டில்.. ஒரு பொருளோ; வெற்றியோ கிடைக்குமென்று தெரிகையில் காத்திருக்கலாம் தவறில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என் வான் தாண்டிய வெற்றி எனை போன்றோருக்கு கிடைக்குமென்று.

    மிகக் நன்றி சிவா, சகோதரி ரமி, சகோதரி வேதா மற்றும் ஐயா அவர்களுக்கும்!

    வித்யாசாகர்

    Like

  10. சக்தி தாசன் சொல்கிறார்:

    அன்பின் வித்யாசாகர்,

    //நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து
    முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில்
    ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும்
    வெற்றி என்பேன் தோழர்களே// உங்களது இந்த வாசகமே உங்களின் எழுத்துக்களில் சுகமான வலிதான் உண்டு என்று காண்பிக்கிறது.

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    அன்புடன்
    சக்தி

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றிகளையா. படித்துவிட்டு மறப்பதற்கன்று எழுத எண்ணுவது, படிப்பவை படிக்கும் போதே தீமையை (தீய எண்ணங்களை) தகர்க்க எழுத எண்ணும் எழுத்திற்கான தவமிது.

      இருப்பினும், என்னை தாண்டி, காலத்தின் மீது கொண்ட ஒரு அசராத நம்பிக்கையில் எழுதுகோல் பிடிக்கத் துணிந்தாலும், உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களாலும் ‘மனது பலம் கொள்ளவே செய்கிறது!

      Like

  11. ஜீவராணி சொல்கிறார்:

    எழுத்துலகில் கடந்து வந்த பாதை கரடு முரடானதாக இருக்கலாம் ஆனால் இனி கடக்க போகும் பாதையும், உங்கள் எழுத்து பயணமும் இனிதே அமைய என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வாயால் சொல்ல சொல்ல ஆழ்மனதில் பதியுமாம். ஆழ்மனதில் பதிவாவதற்கேற்ற படி, உடம்பில் ரசாயன மாற்றம் நிகழுமாம். அந்த ரசாயன மாற்றத்தில் உடல், மனமெனும் புத்தி, சிந்தனை திறனென அனைத்தும் அதற்கான ‘சூழலை ‘மாற்றத்தை ‘தேவையை ஏற்படுத்திக் கொள்ளுமாம். மாற்றிக் கொள்ளுமாம். இதைதான் சங்கல்பம் என்பார்கள். இதன் வழி தான் தனக்குள்ளே பேசும் முறையை அமைத்தார்கள். இதன் பொருட்டே ‘தனக்குள்ளேயே கடைவதென்பதை அறிவுரித்தினார்கள். இதன் பொருட்டே வேண்டுதலை நிர்ணயித்தார்கள். இதற்கே கட வுள் (கடவுள்) என்றனராம். விவேகாந்தர் இதை தான் ‘எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்’ என்றார். நான் ஆக நினைப்பதெல்லாம் ‘எழுத்தாகவே! மனிதம் மிக்க எழுத்தாக மட்டுமே!

      அதற்கு உங்களின் வாழ்த்தும் இருப்பதில் மகிழ்கிறேன். மிக்க நன்றி ராணி!

      Like

  12. Ratha சொல்கிறார்:

    முடிந்துபோன கடிய பயணத்திற்கும் நீளபோகும் நெடிய யாத்திரைகும் வாழ்த்துக்கள்!!
    Dr.Kalam அவர்களின் வாழ்த்து நிச்சயம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல் பெருமைபடவே வைக்கும் ஒவ்வொரு மனிதனையும்…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் ராதா, அவர் ஒரு பிரம்ம யோகி போல் தான். நிறைந்த உழைப்பும் நிறைவான ஞானமும், மனிதர்களின் மேல் அன்பும் பெரு மதிப்பும் கொண்டவர். தற்காலிகமாக இங்கு குவைத்திலிருந்து ஐயா சேது அவர்கள் அவரை காண சென்றபோது நம் கனவு தொட்டில் நாவலை கொடுத்தாராம், அதை பார்த்து விட்டு ஓ வித்யாசாகரா’ என உடனே நினைவு கூர்ந்தாராம். அது அவரின் நினைவு திறன் மட்டுமல்ல, நல்ல மனதின் வெளிப்பாடும் கூட.

      என்னை பொருத்தமட்டில் அவர் வாழும் இந்த தலைமுறையில் ‘நாமும் வாழ்வதில் பெருமையே ராதா. அவருக்கான என் முதல் நன்றி என் உயிரின் இருப்புவரை இருந்துக் கொண்டே இருக்கும்!

      Like

  13. sankar சொல்கிறார்:

    all the best and my heartiest wishes to keep success in your “eluthu payanam”

    நடப்பவை எல்லாம் நல்லதாகட்டும்.அதோடு, உங்களின் “எழுத்துப் பயணத்தில்” முழு வெற்றியடைய என் மனதார்ந்த வாழ்த்துக்களும்..

    Like

  14. கவித் தம்பி..! வணக்கம்.

    கண்டுபல நாளானாலும்
    கவிதையும் கருத்தும்
    காண்கிறேன் பொழுதும்!

    எழுத்தைத் தவமாய்
    இயற்றுவது எப்படி
    என்பதைக் கற்க…
    எல்லாரும் அணுக வேண்டிய
    இனிய முகவரி தங்களுடையது
    என்பதை அறிவேன் நான்!

    என்
    கங்கை மணிமாறன் .வேர்ட் பிரஸ்.காம்
    கண்டு பதிலிடுக. நன்றி

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தீ பொறி பறக்கும் கனல் கொண்ட தமிழில்
      வாழ்வின் வசந்தம் பரப்பப் பேசும் – சந்தக் கவி
      எம் சொந்தக் கவி
      ஒல்லிக் கவிஞனாய் இருந்தாலும் – தன்
      வெல்லும் வார்த்தைகளை எக்காலத்தையும் தாங்கும் கவி
      நான் பார்த்து ரசித்த கவி
      பேசினால் இவர் போல் பேசவேண்டும் என்று
      முதன்முதலாய் நான் கண்டு வியந்த கவி

      இத்தனை அருந்தும் அன்பிலும் பண்பிலும்
      வானம் கடந்து நிற்கும் என்றைக்குமான எங்களின்
      குவைத் மக்களின் மனமெலாம் நிறைந்த –
      பெரும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய

      ஐயா அவர்களுக்கு இணையத்தின் பெரு – வரவேற்பும்
      மிக்க அன்பும் வாழ்த்துக்களும் வணக்கமும் நிறையட்டும்!

      தங்களின் இந்த வலைப் பூவைப் பற்றி வேறென்ன சொல்ல ஐயா, இரண்டு
      சொல்லலாம். ஒன்று, இப்படி தன்னை அறிமுகப் படுத்தவே அத்தனை தன் மீது அசரா உறுதியும், நம்பிக்கையும் – அவசியப் பட்டால் நல்லவைக்கே சமுகம் எரிக்கும் தைரியமும் வேண்டும்.

      இரண்டு; நீங்கள் சொன்ன அத்தனைக்கும், உங்களின் இத்தனை அழுத்தமான நம்பிக்கைக்கும் மிக முழு தகுதியானவர் நீங்கள்.

      மிக்க வாழ்த்துக்களும், இன்னும் பல சாதனை படைக்க இறை அருளும் நிறையட்டும் ஐயா..

      வீட்டில் சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள். அவர்கள் மிக நன்றாக வருவார்கள் என்று எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு!

      பேரன்புடன்…

      வித்யாசாகர்

      Like

  15. அன்புடன் மலிக்கா சொல்கிறார்:

    இப்போதுதான் முதல் முறை இத்தளம் வருகிறேன்.
    முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    அப்பப்பா என ஆச்சர்யப்படவைத்துவிட்டீகள். ஒரு படைப்பாளியின் மன உணர்வை அப்படியே பிரதிபளிக்கவைத்துள்ளீர்கள்.

    தேடல்; மனத்தேடல்;
    அத்தேடலின் முடிவில் தெளிவு,
    தெளிவோடு துணிவு இருக்கவேண்டுமென்பதை
    இப்பதிவில் உணர்ந்தேன்.

    இன்னும் பல வெற்றிகளைக்குவிக்க மீண்டும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு மலிக்கா அவர்களுக்கு வணக்கம், சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளின்கண் உங்களுக்கு என்ன பற்றிருக்குமா என்ன அவஸ்தை இருக்குமோ அதுவே என் எழுத்திற்கான பாடுபொருளும்.

      இப்பூமிப் பந்தின் நன்மைக்காகவும் எழுத எண்ணும் ஒரு எழுதுகோல் என்னை எனையும் வாழ்த்திச் சென்றதில் மிகையாய் மகிழ்கிறேன்…

      உங்களுக்குமான என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.. அன்பும் நிறையட்டும்!!

      Like

  16. suganthiny75 சொல்கிறார்:

    தாங்கள் வாங்கிய இத்தனை பட்டங்களுக்குமப்பால் எனது வாழ்த்து எங்கனம்???!!!

    Like

    • ஒரு பிள்ளை எப்படி உலகிற்கே ராஜா ஆனாலும் தாயிற்கு பிள்ளையோ; அப்படி, என்னதான் வாங்கினாலும், உங்களைப் போன்றோரின் அன்பிற்கு மத்தியில் என்றுமே உண்மையானவனாய் மட்டுமே இருக்க எண்ணுகிறேன் சுகந்தி. வாழ்வின் கடைதூரம் முடியும் முன், இதயங்களை எழுத்தால் சம்பாரிக்க முடிந்தாலும் எல்லோரையும் என் எல்லாம் படைப்பும் சென்றடையுமா சென்றடைந்துள்ளதா எனில், பட்டமோ விருதுகளோ ஒன்றுமே இல்லை சகோதரி.., பார்ப்போம், என்றோ வாங்கி என்றோ படிக்காமலா போகுமென் மக்கள்; அவர்களுக்கான என் படைப்புக்களை???!!!

      Like

  17. suganthiny75 சொல்கிறார்:

    தங்களுக்கு நன்றி, ஆனால் என் பெயரை குறிப்பிடும் பொது மட்டும் என் நண்பர்கள் உட்பட அந்த ‘னி’ யை மட்டும் குறிப்பிட தயங்குகிறார்களோ; தெரியலை..

    Like

    • ஆம், சுகந்தினி ஒரு தனித்துவம் மிக்க பெயர் தானே, மறுப்பதற்கில்லை, எனக்கு அவசரத்தில் மட்டுமில்லாது செல்லமாக அன்போடு பெயரை சுருக்கி அழைக்கும் பழக்கமும் உள்ளதால் அங்கனம் குறிப்பிட நேர்ந்திருக்கலாம். இனி சுகந்தினி என்றே குறிப்பிடுகிறேன். மிக்க நன்றி தங்களின் தொடர் வருகைக்கும் அன்பிற்கும் சுகந்தினி!!

      Like

  18. suganthiny75 சொல்கிறார்:

    இத்தனை பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற நீங்கள் கண்டிப்பாக அந்நேரத்தில் உங்களின் தாயையும் தந்தையையும் தன் நாட்டையும் நினைத்து இருப்பீர்கள், அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

    Like

    • மிக்க மகிழ்வும் நிறைவுமான நேரமது. என்னைப் பொருத்தமட்டில்; அவைகளை என் எழுத்திற்கு தாண்டி, உழைப்பிற்கு ஒரு அங்கீகாரமாகவும், மேலும் எழுதுவதற்கு ஒரு ஒப்புதல் போலவும்மடுமே எண்ணி நிறைவடைந்துக் கொண்டேன். குறிப்பாக வீட்டை பெற்றோரை என்னும் அளவிற்கு ‘இலக்கியத்தில் அவர்களுக்கு உடன்பாடோ, அல்லது இந்த பயணத்திற்கு அவர்களின் அனுசரணையோ ஆலோசனையோ இல்லை என்பது வேறு, எனினும் முதல் முறைப் பெறுகையில் இதைப் பார்க்க இங்கே அம்மா இல்லையே என்று எண்ணினேன். அப்பா இல்லையே என்ற வருத்தம் துவங்கி வருடங்கள் இருபதுக்கு மேல் ஆகிவிட்டமையால் அது வழமை ஆனது. நாட்டைப் பற்றி எண்ணி பெருமை கொள்ளும் அளவிற்கு நம் மண்ணிற்கு அத்தனைப் பெரிய சாதனைகளை செய்யவில்லை என்பதால் அந்த நினைவும் எழவில்லை, ஆனால் உடல் புகும் மண்ணிற்கு மேல் உயிர்த்து கிடக்கும் எழுத்துக்களாய் எதிர்காலத்தில் எதையேனும் விட்டுச் செல்லவேண்டும் என்ற அவஸ்தை நிறைய உண்டு.

      அடுத்த மூன்று விருதுகள் அறிவித்த போதே, மனதில் தோன்றிய எண்ணம் இந்த பெருமையும் மகிழ்வும் இலக்கியத்தின் பேறும் புகழும் அம்மாவையே சேர வேண்டும் என்றெண்ணி அம்மாவையே அனுப்பி அவ்விருதுகளை வாங்கினேன். உடன் நண்பர்களும் இருந்துப் பெற்றது சிறப்பு.. http://vidhyasaagar.com/2011/01/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

      Like

  19. suganthiny75 சொல்கிறார்:

    thangalin gnaanamadaa nee enakku kavithai vaasiththu varuhiren evlo coments anuppium evvitha pathilumillai. sorry enaku miha kavalajaaha ullathu.

    Like

  20. வித்யாசாகர் சொல்கிறார்:

    அன்பு வணக்கம் சுகந்தினி, நலமாக உள்ளீர்களா? முதலில் மன்னியுங்கள். உண்மையிலேயே உங்களை எண்ணி பெருமை படவேண்டும் தான். காரணம், ஒவ்வொரு படைப்பிற்கும் நேரம் எடுத்து; மறுமொழி இட்டது மொத்த நம் தளத்தில் அதிக கருத்துப் பகிர்ந்தது நீங்களாகத் தான் இருப்பீர்கள். ஆனால், நீங்கள் பதியும் கருத்துக்களை தமிங்கிலத்தில் பதிவதால், அதை மீண்டும் நான் தமிழில் மாற்றிப் பதிகிறேன், பின் என் பதிலிடுகிறேன். இதற்கெல்லாம் அதிக நேரமெடுக்கிறது சுகந்தினி. அத்தனை நான் செய்துக் கொண்டிருந்தால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரமும் படைப்புக்களை அமைப்பதின்றி இதில் போயிடாதா? இருப்பினும் உங்களின் மறுமொழிகளை படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சற்று நேரம் எடுத்து எல்லாவற்றையும் மாற்றி விடுவோம் என்று எண்ணினேன்.

    மிக்க நன்றி உங்களின் இத்தனை பற்றினை நம் எழுத்தின் மீது எடுத்துக் கொண்டமைக்கு. மற்றபடி மிக்க வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும் உங்களுக்கு!

    முடிந்தால் கீழே கொடுக்கப் பட்டுள்ள தொடுப்பினை பயன்படுத்தி, தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்துக் கொள்ளவும், பிறகு இணையமின்றி கூட நீங்கள் தமிழில் தட்டச்சலாம். http://vidhyasaagar.com/2009/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/

    மிக்க நன்றிகளும் வாழ்த்தும் அன்பும் உரித்தாகட்டும் சுகந்தினி!!

    Like

  21. suganthiny75 சொல்கிறார்:

    தங்களின் பதில் முழுமை அடையவில்லை..

    Like

  22. suganthiny75 சொல்கிறார்:

    தங்களை இவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிவிட்டமைக்கு என்னை மனதார மன்னிக்கவும் இத்தனை தூரம் நான் தங்களின் நேரத்தை நான் வீனாக்கி விட்டேனே ஐஐஒ தங்களை சிரமப்படுத்ததற்கு நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். என் எழுத்துகளில் எதுவும் குறை இருந்தால் அதை தயவுசெய்து மன்னிக்கும்படி மன்றாடி கேட்டுகொள்கிறேன் அதைவிட இதுவரை தங்களின் படைப்புகளை தாமதம் செய்தமைக்காக என்னை மன்னிக்கும்படி தங்களின் எல்லா வாசகர்களையும் வேண்டிகொள்கிறேன்.

    Like

    • மன்னிப்பென்ற வார்த்தையின் இடைவெளி அவசியப் படாத புரிதல் கொள்கிறேன் சுகந்தினி. அப்படி எல்லாம் இல்லவே இல்லை, நீங்கள் வருத்தப் பட்டதாகச் சொல்லவே; அதற்கு விளக்கம் தரவேண்டிய நிர்பந்தம் ஆனேன். மற்றபடி, தங்களின் கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றியானவன் நான். என்னன்பு சகோதரியாய் எண்ணிக் கொள்கிறேன் எந்த வருத்தமும் இல்லை சுகந்தினி. மாறாக தங்களின் குணம் எண்ணி மகிழவே செய்தேன்! நன்றி!!

      Like

  23. suganthiny75 சொல்கிறார்:

    கோபத்தின்
    உச்சத்தில்
    வாழ்வின் அவலங்களே
    கைகொட்டிச் சிரிக்கின்றன;

    நரநரவென்று மென்ற
    பற்களின் நசுக்களில்
    இரத்த உறவுகளே
    சிக்கித் தவிக்கின்றன;

    இளமை தொலைந்தும்
    முதுமை கடந்தும்
    மரணத்தின் உச்சம்வரை
    கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன;

    நட்பு மறந்து, நன்றி துறந்து
    கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை
    மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில்
    கோபம்; முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை;

    கைகொட்டி சிரித்த
    நான்கு பேர் சிரிப்பிற்கு,
    காலம் முழுதிற்காய் வீழும்
    ஒற்றை பழிச்சொல்லிற்கு,
    நிறைய வீடுகளின் காரணம் –
    வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே;

    இந்த வரிகள் எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு கண்டிப்பா ஒவ்வொரு மனித ஜென்மத்திற்கும் போய் சேர வேண்டிய ஒரு செய்தி தான் ஒரு மனிதன் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும் இந்த கோபமே அவனை ஒரு சாக்கடைக்குள் தள்ளிவிடும் என்பதை நன்றாக விளக்கி உள்ளீர்கள். அத்தனைக்கும் எனது வரவேற்பும் மரியாதைகளும் உரித்தாகட்டும்

    Like

  24. suganthiny75 சொல்கிறார்:

    தங்களின் ஞானமடா நீ எனக்கு தொடர் நன்றாக இருக்கு அதை தொடராக இணையத்தில் இட முடயுமா? ஒவ்வொரு தொடரும் நன்றாக உள்ளது போன ஜென்மத்தில் நீங்கள் செய்த புண்ணியம் தான் இந்த ஜென்மத்தில் உங்களை ஒரு கவிஞராக பிறந்துள்ளீர்கள் போல தெரிகிறது. என்ன சரியா?

    Like

  25. மிக்க நன்றி சுகந்தினி. நம் தளம் வழியாய் ஒரு ஆய்வையே நடத்துகிறீர்கள். உங்களின் எழுத்து மீதான பற்றும் எடுக்கும் சிரத்தையும் எதிர்கால எழுத்தின் பலனை இன்றே காட்டுகிறது. ஓர் நாள் நம் மக்கள் நிச்சயம் நம் படைப்புக்களை திரும்பிப் பார்க்கும் என்பதை உறுதி படுத்துகிறது உங்களின் கருத்துப் பகிர்வுகள். மிக்க நன்றி சுகந்தினி!!

    தவிர, ஞானமடா நீயெனக்கு விரைவில் புத்தகமாக வரவுள்ளது வந்ததும் தெரிவிக்கிறேன். இதர நம் படைப்புக்களுக்கு, ஐயா கிரிராஜ் (+91 96000 00952) அவர்களைத் தொடர்பு கொண்டு வாங்கி படித்து பாருங்கள்..

    மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும்!!

    Like

  26. suganthiny75 சொல்கிறார்:

    கண்டடிப்பாக ஏனெனில் எங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வது கூட ஒரு சமூக பணி என்றுதானே சொல்லவேண்டும்? அதில் இருக்கும் சந்தோசமும் தனி தானே? ஒரு சின்ன வேண்டுகோள் என்னை பாராட்டுவதற்கு நான் அப்படி பெரிதாக என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு சின்ன பொண்ணு தான் தாங்கள் இப்படி எல்லாம் பாராட்டும் அளவுக்கு நான் ஒரு செயலும் செய்யவில்லை எனக்கென்று சில கடைப்பாடுகள் இருக்கு தானே அதை தான் நான் செய்தேன் அதைவிட தாங்கள் தங்கள் படைப்புகளை இடைநிறுத்தி என்னை பாராட்டுவது நான் தங்களின் பாராட்டை பெறுவதற்காக செய்தது போல் இல்லையா?

    Like

  27. suganthiny75 சொல்கிறார்:

    எந்த ஒரு செயலை சிலபேர் செய்யும்போதும் சிலபேர் ஏதாவது பிரதிஉபகாரம் எதிர்பார்த்து தான் செய்வார்கள். ஆனால் தாங்கள் அப்படி இல்லை என கண்டிப்பாக என்னால் உறுதியாக சொல்லமுடியும். தவிர தாங்கள் சிந்திய ஒரு துளி வியர்வை இன்று பெரு வெள்ளமாக தங்களை சூழ்ந்து ஒரு சந்தோஷ சமுத்திரத்தில் மிதக்கிறீர்களே இதை தாங்கள் என்றைக்காவது எதிர்பார்த்ததுண்டா? அதாவது நான்(தாங்கள்) இப்படி ஒரு சிறந்த எழுத்தாளனாக வருவேன் என்றோ அல்லது தங்களுக்கு இத்தனை வாசகர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்றோ நினைத்ததுண்டா?

    Like

    • என் கனவில்; ஒரு துளி கூட இன்னும் நிறைவடையவுமில்லை; அதற்குத் தக்க நான் அத்தனை உழைக்கவோ, அலல்து முழுமையாக இன்னும் என்னை பக்குவப் படுத்திக் கொள்ளவோ இல்லை சுகந்தினி!

      எனக்கான வெற்றி என்பது மிகப் பெரிது, அதுவரை அடையும் சிறுசிறு லட்சியத்தின் வெற்றிகளுக்கு, ஒரு குழந்தைக்கு கையில் கிடைத்த மிட்டாயின் சிரிப்புப் போல்; சிரித்துதான் கொள்கிறேன்!

      Like

  28. suganthiny சொல்கிறார்:

    தங்களுக்கு என் வணக்கங்கள் நானும் கூட வலைபதிவு தொடங்கியுள்ளேன் தாங்கள் அதற்கு வருகைதரவும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    என்னை பற்றி

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பசுமைப் பூத்துச் சொரியும் பாமலர் தொட்டமது. ஒரு குழந்தை தத்தித் தத்தி தவழ்ந்து வானத்தை எட்டித் தொட்டிடும் கனவுகளை விழிகளில் நிரப்பி, யதார்த்தம் பீரிட்ட உணர்வுகளை கவிதை முலாம் பூசி இதயங்களில் விதைகளாய் தூவும் விந்தையது சுகந்தினி உங்கள் தளம்.

      நேரமெடுத்து முன்பொரு கண்டேன், ரசித்த இடத்தை கருத்தாய் பதிந்தேன் என்றாலும் அதன் சுவடுகளை இங்கே வரும் உறவுகளுக்காய் விட்டுவைத்து, தமிழால் போற்றும் சிறந்த படைப்பாளியாய் நீங்கள் திகழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் அன்பினையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்..

      Like

  29. தமிழ்த்தோட்டம் சொல்கிறார்:

    இனிய பிறந்த நாள் நல்வாழ்துகள் அண்ணே

    Like

  30. santhraj சொல்கிறார்:

    all the best and my hertiest wishes to keepsuccess in your eluthu payanam.

    Like

  31. vijayaraghavan k சொல்கிறார்:

    நண்பரே, கவி வித்யாசாகர் அவர்களே, வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு உமது எழுத்துப் பணி, நலமாய் தொடர எனது வாழ்த்துகள்..

    விஜயராகவன். K
    சதுரங்கப் பட்டினம், கல்பாக்கம்.

    Like

  32. Devi Shruti சொல்கிறார்:

    உமது எழுத்துப் பணி, நலமாய் தொடர எனது வாழ்த்துகள்..

    Like

பின்னூட்டமொன்றை இடுக